மட்டக்களப்பு இடைத்தங்கல் முகாம்களுக்கு இராசமாணிக்கம் அமைப்பு நிவாரணம் வழங்கி வைப்பு.

இடைத்தங்கல் முகாம்களுக்கு இராசமாணிக்கம் அமைப்பு நிவாரணம் வழங்கி வைப்பு.
நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பல மக்கள் அகதிகளாக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலும் ஏற்பட்ட அதே வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் பல இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் நேரடியாக சென்று அவர்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து பின்னர் அமைப்பினால் மக்களுக்கு நிவாரணம் அவ் முகாம்களுக்கு சென்று வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களிலும் இந்த அமைப்பினால் அனர்த்தங்களின் போது துரிதமாக செயற்பட்டு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.