(கிருசாயிதன் )
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் தாலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில் தம்பிலுவில் வீ.சி வீதியில் இடம்பெற்றுள்ளது .
மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
குடும்ப பெண் ஒருவர் தம்பிலுவில் பிரதான வீதியிலிருந்து வீ.சி வீதியினூடாக தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் தாலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இதே போன்றதொரு சம்பவம் அண்மையில் திருக்கோவிலிலும் இடம்பெற்றது .
அண்மைய காலங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது . மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் .
இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .