15 வயது மகள் கர்ப்பம் தந்தை கைது !

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்டபகுதி ஒன்றில் 15வயது மகள் கர்ப்பம் தரிக்கபட்ட சம்பவம் தொடர்பில் தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 25.02.2020.செவ்வாய்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

குறித்த 15வயது சிறுமி வயிற்றுவலி காரனமாக குறித்த சிறுமியை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைக்கு ஈடுபடுத்தபட்ட போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக இனங்காணப்பட்டமை தொடர்பில் வைத்தியசாலையின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பெயரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இதே வேளை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தந்தை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.