மட்டக்களப்பு பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மூவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது !

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துவந்த  மூவரை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

இந்நிலையில், பாடசாலைகளுக்கு அருகில் மறைந்திருந்து மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை கலந்த பொருட்களை விற்பனை செய்து வந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து கஞ்சா கலந்த மூக்குத்தூள் போத்தல்கள் உட்பட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.