கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கத்திலிருந்து எமது நாட்டு மக்கள் காப்பற்றப்படவேண்டும் அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையிலான அரசாங்கத்திற்கு நல்லாசி கிடைக்கவேண்டும் என்றும் பிராத்தனை செய்யும் விசேட பூஜை வழிபாடு இன்று 06.04.2020 மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு- வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் சிவஸ்ரீ மாணிக்கம் ஜெபாலன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்புஜை வழிபாட்டில் பொலிஸ் அதிகாரிகள் , பொதுமக்கள் மற்றும் உள்ளுர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எமது நாடு உள்ளிட்ட முழு உலகமும் பெரும் சவாலுடன் சந்தித்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு மருத்துவ முறைகள் தாமதமடைந்துள்ள நிலையில் இறை வழிபாடு மாத்திரமே உரியதாக அமையுமென இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.