கொவிட் 19 தொற்று நோயாளர்களை அடையாளங்காணும் நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் 1100 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக Covid 19 தொற்றை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் நாடு முழுவதிலும் சுமார் 141,515 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை 6.00 மணியளவில் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.