மைத்திரிக்கு யாரும் வாக்களிக்க கூடாது- பிரசன்ன


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லையென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,பொதுஜன பெரமுனவிற்கும் சு.கவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சு.க தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லையென்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சு.க வினர் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதை நாம் கவனமாகப் நோக்க வேண்டும், ஏனெனில் அவரை நம்ப முடியாது .

தேர்தலுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதியும் அவரது குழுவும் அமைச்சரவையில் பதவிகளை பெற்றுகொள்வது தொடர்பாக நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் எந்த நிபந்தனைகளும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கும் மக்களுடனான நெருக்கத்தை தடுக்க எதிரணி போராடுகின்றது. ஒரு வலுவான நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும் என்று கூறிய அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.