நாளை முதல் வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம்

பஸ் முன்னுரிமை பாதையை பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ் மற்றும் வேன்கள் மாத்திரமே நாளை முதல் பயன்படுத்த முடியும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு நாளை முதல் முன்னுரிமை பஸ் பாதையில் பயணிக்க முடியாது. அதனால் அவை வெளிப்புற பாதையை பயன்படுத்தலாம்.