மஹர சிறைச்சாலையிலிருந்து தமது வைத்தியசாலைக்கு 4 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் தீ பரவியுள்ளது.
சிறைச்சாலையில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை,மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.