கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 45 வயது பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நவம்பர் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்துக்கான காரணம் கொவிட்19 தொற்று என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பன்னிப்பிட்டியை சேர்ந்த 80 வயது ஆண் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிபுர வைத்தியசாலையில் நவம்பர் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்கின் மொத்த எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.