மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் 9 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா!




மட்டக்களப்பில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்து . இன்று (13.01.2021) அதிகாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுமாறாக  இன்று புதன்கிழமை பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் செய்யப்பட்ட 132 பி.சி.ஆர் பரிசோதனையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் வெல்லாவெளி சுகாதார பிரிவில் 3 பேர் உட்பட 12 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.