இன்று காலை அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் அகிம்சை வழியிலா சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய திருக்கோவில் பொலீசார் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்டப்பட இருந்த பதாகைகளை கைப்பற்றியதுடன் பதாகைகளையும், போராட்ட காரர்களை ஏற்றிச் சென்றதாக கூறி திருக்கோவில் பொலீசார் வாகனம் ஒன்றைக் கைப்பற்றி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
இதேவேளை ஒன்பது பேருக்கு இன்று காலை திருக்கோவில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.
சாரதியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதுடன் சாரதியை விடுதலை செய்தனர் .