ஆங்கிலத்தை விசித்திரமாக 14 வயதான மாணவியின் உடலை தொட்டு , முத்தமிட்டு கற்பிக்க முயற்சித்த ஆசிரியர் கைது!


மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்திலத்தில் பிரசித்தமான பாடசாலையொன்றின் அறைக்குள், 14 வயதான மாணவியின் உடலை தொட்டு, அந்த மாணவிக்கு முத்தம் கொடுப்பதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆங்கில பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலிம்பட பொலிஸாரே அவ்வாசிரியரை கைது செய்துள்ளனர்.

அறையொன்றில் இருக்கும் புத்தகத்தை எடுத்து வருமாறு அவ்வாசிரியர், மாணவிக்கு பணித்துள்ளார். மாணவியும் புத்தகத்தை எடுப்பதற்காக, அவ்வறைக்குச் சென்றுள்ளார். எனினும், மாணவியின் பின்னாலேயே சென்ற அவ்வாசிரியர், மாணவியை கட்டிப்பிடித்து, இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும், அவருடைய பிடிக்குள் சிக்கிக்கொள்ளாது, தப்பியோடிய மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.