திருக்கோவில் பிரதேசத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகள் வழங்கி வைப்பு



(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் சமூர்த்தி வங்கி கிளையின் கீழ் உள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு விநாயகபுரம் சமூர்த்தி வங்கி கிளையின் முகாமையாளர் திருமதி கே.கவிதாவின் தலைமையில் சமூர்த்தி வங்கி கட்டடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்று இருந்தன.

இதன்போது சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வரும் குடும்பங்களை தொழில் ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் சமூர்த்தி வங்கியினால் குறைந்த வட்டி வீதத்தில் இவ் கடன் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் விநாயகபுரம் சமூர்த்தி வங்கி கிளையின் ஊடாக இன்று 8 குடும்பங்களுக்கு 50ஆயிரம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா கடன் தொகைகள் வழங்கிப்பட்டுள்ளன.

இவ் கடன் தொகையானது சுயதொழில் முயற்சியாளர்கள் தாம் முன்னெடுத்து வரும் தொழில் ரீதியான உபகரணங்கள் மற்றும் பொருள் கொள்வனவுகளை மேற்கொள்வதற்காகவே இவ் கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் விநாயகபரம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி கே.கவிதா மற்றும் சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.