குறித்த உளச்சார்பு பரீட்சையானது எதிர்வரும் 30.10.2021ஆம் திகதி மீண்டும் நடத்தப்படவுள்ளதோடு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு தற்போது தபாலிடப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பரீட்சார்த்தி எவருக்காவது 27.10.2021ஆம் திகதிக்கு முன் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறவில்லையெனின் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.