பால் புரையேறியதில் 10 மாத குழந்தை உயிரிழப்பு


வடமாராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரையேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த குழந்தையை அம்பன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மரண விசாரணையை பருத்தித்துறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மேற்கொள்ளவுள்ளார்.