வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு !


வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற 100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.

அதன் இறுதி நாளான இன்று வடக்கு கிழக்கு தழுவி காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு 100 நாள் செயல்முனைவின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துக எனும் தொனிப்பொருளில் பாதாகையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த இறுதி நாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், தியாகராஜா மற்றும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.