புத்தாண்டு தினமன்று வாள் வெட்டு சம்பவம் : ஒருவர் படு காயம் !



யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (1) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குறித்த நபரை , நேற்றைய தினம் இரவு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபரை அயலவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதான வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.