பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
முன்னர் சோதனை செய்யப்பட்ட அலுவலகத்தில், புலனாய்வு மதிப்புள்ளதாக நம்பப்படும் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஆவணங்களுக்கு மேலதிகமாக, பல மொபைல் போன்கள் மற்றும் ஒரு சாட்டிலைட் தொலைபேசியும் (satellite phone ) நடவடிக்கையின் போது மீட்கப்பட்டன.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து CID மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.