தேங்காய் பால் ஏற்றுமதியின் ஊடாக பெப்ரவரியில் 2,971 மில்லியன் ரூபா வருவாய் : தெங்கு அபிவிருத்தி அதிகார சபை !



தேங்காய் பால் ஏற்றுமதியின் ஊடாக கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 2,971 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 570 மில்லியன் ரூபா அதிக வருவாய் கிடைத்துள்ளது.