ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: 80 வயதான தொழிற்சாலை உரிமையாளர் கைது!


ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு கல்வியை கற்கும் 23 வயதுடைய மாணவி ஒருவருக்குப் பட்டப் படிப்புக்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகக் கூறி தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை தொடரும் இந்த மாணவி , தனது படிப்பிற்குத் தேவையான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்வதற்குத் தனது காதலன் மூலம் பிலியந்தலையிலுள்ள தொழிற்சாலை ஒனறுக்குச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது .

இந்த மாணவியிடம் குறித்த தொழிற்சாலையின் 80 வயதுடைய உரிமையாளர் தவறான முறையில் நடந்துகொண்டதாக மாணவி தனது காதலனுக்குத் தெரிவித்துள்ளார். காதலன் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.