பிக்குனியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி !


பிக்குனியாகத் துறவரத்தில் ஈடுபடப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை , பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியே இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவர் கடந்த 25 ஆம் திகதி அன்று தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சிறுமியின் தாயார் பேருவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.