தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறை கடித விநியோகத்திற்கு இடையூறு !


தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடித விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறையினால் சில நாட்கள் தாமதத்தின் கீழ் சில மாகாணங்களில் கடிதங்களை விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் சத்குமார தெரிவித்துள்ளார்.

வலயங்களாகப் பிரித்து கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தபால் விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2000 ஊழியர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளமை மற்றும் புதிய அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமை ஆகிய காரணங்களால் தபால் சேவையில் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.