அக்கரபத்தனையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு !


அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டத்தின் மேற்பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்படுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வனப்பகுதிக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இந்த சடலம் அடையாளம் காணமுடியாதவாறு அழுகிக் காணப்பட்டதுடன் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரித்தனர் .

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .