ஒரே மாணவியுடன் கொண்டிருந்த காதலால் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் !



வியங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வியாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரம் 10யில் கல்வி பயிலும் மாணவனும் தரம் 9யில் கல்வி பயிலும் மாணவனும் ஒரே மாணவியுடன் கொண்டிருந்த காதல் உறவின் அடிப்படையில் இரு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது .

இந்த மாணவி தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனுடன் காதல் உறவை ஏற்படுத்தியதனையறிந்த தரம் 10யில் கல்வி பயிலும் மாணவன் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது தரம் 9யில் கல்வி பயிலும் மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது .