மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்திலிருந்து முதன்முறையாக பொறியியலாளராக தெரிவுசெய்யப்பட்ட மாணவி மற்றும் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 2ம் இடமும் 13ம் இடமும் பெற்ற மாணவர்கள் உட்பட பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சிறப்புச் சாதனை புரிந்து, எமது பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், அவர்களுக்கு கல்வி வழங்கிய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று பாடசாலையின் அதிபர் திரு க. அரசரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பல பொதுச் சமூக அமைப்பினரும் கலந்து கொண்டனர்.