பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு



தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -2.0% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2025 மார்ச் மாதத்தில், இது -2.6% ஆக பதிவாகியிருந்தது.

இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 மார்ச் மாதத்தில் 0.6% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் 1.3% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2025 மார்ச் மாதத்தில் -4.1% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் -3.6% ஆகக் அதிகரித்துள்ளது.