மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி


மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குருணாகல், பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.