கைது செய்யப்பட்டவர்கள் 22, 25, 28 வயதுடையவர்கள் ஆவார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட 1 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை, பதில் பொறுப்பதிகாரி சம்பத் தலைமையில், பொலிஸ் அதிகாரிகள் ஜேம்ஸ், பார்க்க, செனவிரத்ன, சிந்திக்க, குமாரசேகர, நிஸான், யுவகாந்த் மற்றும் காவிந்தி ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.