கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலையில் நடைபெற்ற2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

(சித்தா)
எதிர்காலத்தில் மனித சமூகத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கேற்ப சிறந்த குடிமகனாக மாற்றியமைக்கத் தேவையான திறன் கல்வி மூலம் மாணவர்களுக்கு வழங்கி சமூகத்தில் சிறப்பான வாழ்க்கைமுறையை அமைத்துக் கொடுக்கின்றது. இந்த வகையில் கல்வியின் மூலம் நிர்வாக அமைப்புகளில் நிலவும் பல்வேறு செயற்பாடுகள் பற்றிய புரிதலையும் அனுபவத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனநாயகம் என்பது ஒரு சமூக அமைப்பு மற்றும் வாழ்க்கை முறை என்றாலும் அது அரசாங்க அமைப்பும் கூட. இந்த ஜனநாயக அரசாங்க முறைக்கு இணங்கச் செயல்படும் எதிர்கால சந்தததியினருக்கு அந்த ஜனநாயக அரசாங்க அமைப்பு, அதன் நடைமுறைகள், மற்றும் அதன் முக்கியத்துவம், பிரதிநிதித்துவ ஜனநாயகம், அதன் பொறுப்புகள், வாக்களிப்பது, வாக்களிப்பின் முக்கியத்துவம், சட்டம், சட்டத்தினை மதித்து நடத்தல், பற்றிய அனுபவங்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த வகையில் கல்வி அமைச்சும், அதனோடிணைந்து பாடசாலைகளும் மாணவர் பாராளுமன்றங்களை அமைத்து அதனைச் செயற்படுத்தி வருகின்றன.  இந்த வகையில் கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலை 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று (25.06.2025) கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் S.E  றெஜினோல்ட் FSC தலைமையிலும், சிரேஸ்ட ஆசிரியர் இந்துமதி வரதராஜன் ஒழுங்கமைப்பிலும் மாணவர் பாராளுமன்றம் சிறப்பான முறையில் நடைபெற்றது.