
சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டு சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், 8 உதவிக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 சிறைச்சாலை பதில் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.