வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சந்தேக நபர் கைது



வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் ரூபா 50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கிருலப்பனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டு கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து கொம்பனி வீதிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.