சிஐடியில் ஆஜராகவுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில்





முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.