
யாழ்ப்பாணம் - மானிப்பாய், சங்கானை பகுதியில் உந்துருளியும், பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சங்கானை, பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை உந்துருளி முந்திச் செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
குறித்த விபத்தில் மாதகல் பகுதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை உலகேந்திரன் என்ற 56 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.