
ஆரம்ப நிகழ்வாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் மர நடுகை இடம் பெற்ற நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய முன்றலில் மரக்கன்றினை நட்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், வலய ஆணையாளர் எ. ராசிக், கோட்ட ஆணையாளர் எம்.எம். சியாம், சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகளான ராஜினி செவ்வேட்குமரன், அருஷ்கான் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னோடி மாணவர்கள், கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.
மேலும் கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கல்முனை ஆர்.கே.எம். வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, சண்முகா மகா வித்தியாலயம், அல் மிஷ்பா மகா வித்தியாலயம், உவெஸ்லி உயர் பாடசாலை, நீலாவனை விஷ்ணு மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், பொலித்தின் பாவனையை முற்றாக ஒழித்தல், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவது தொடர்பான விடயங்களை கருத்தரங்கின் வளவாளர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம். றியாஸ் நிகழ்த்தினார்.
அத்துடன் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மாவட்ட இணைப்பாளர் யூ.எல். ஹபீலா உட்பட முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு அம்பாரை மாவட்டத்தின் கல்முனை சாய்ந்தமருது, காரைதீவு பிரதேச சுற்றாடல் அதிகாரிகள் .ராஜினி.செவ்வேட்குமரன், அருஷ்கான் ஆகியோர் ஒழுங்கமைப்பில் சுற்றாடல் முன்னோடி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று கல்முனை மாநகரில் இடம் பெற்றது.