யாழில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு



யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் அதீத இரத்த பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றனர்.