இலங்கை வங்கி ரூபா 5 பில்லியன் பங்கிலாபத்தை திறைசேரிக்கு கையளித்தது



நாட்டின் முதன்மையான அரசுக்குச் சொந்தமான வணிக வங்கிகளில் ஒன்றான இலங்கை வங்கியின் (BOC) பணிப்பாளர் சபையானது, அதன் ஒரே பங்குதாரரான பொது திறைசேரிக்கு ரூபா பில்லியன் பங்கிலாபப் பங்களிப்பை 5 அங்கீகரித்துள்ளது.

முந்தைய ஆண்டில் அதன் விதிவிலக்கான நிதி செயலாற்றுகையினைத் தொடர்ந்து, தேசிய பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற வங்கியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த தீர்மானம் பிரதிபலிக்கிறது.

இந்தப் பங்களிப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில்வைத்து, 2025 ஜூலை 03 அன்று திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவிடம் கையளிக்கப்பட்டது.