எத்திமலையில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது


மொனராகலையில் எத்திமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் எத்திமலை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்திமலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் எத்திமலை பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 155 கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.