பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கண்டி - கடுகண்ணாவை நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபர் ஆவார்.
சந்தேக நபரான வயோதிபரிடமிருந்து 719 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட வயோதிபர் மேலதிக விசாரணைகளுக்காக கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.