ஆரையம்பதியில் பாம்பு தீண்டி ஒருவர் பலி



மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி, தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

38 வயதுடைய உயிரிழந்த நபர், இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் இன்று மாலை தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாம்பு தீண்டி உயிரிழந்தார்.

திருநீற்றுக்கேணி கிராமத்தில் நீண்ட காலமாக பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் முதலைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.