ஏழு மாகாணங்களிலும் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கட்கிழமை (27) காலை வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள "மொன்தா" சூறாவளி காரணமாக, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், இரண்டு மாவட்டங்களிலும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று வீசக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.













.jpeg)