புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் கைது !


தனமல்வில - பட்டுவேவ பகுதியில் புதையல் தோண்டிய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (13) காலை பதிவாகியுள்ளது.

தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 45 முதல் 58 வயதுக்குட்பட்ட ஹிங்குராண, அம்பலாந்தோட்டை மற்றும் மஹாவேவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.