கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது !



சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கணவன் மற்றும் மனைவி ஆவர்.

சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் டுபாயில் இருந்து இன்றைய தினம் அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் கணவனும் மனைவியும் விமான நிலையத்தின் (Green Channel) விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது கணவனும் மனைவியும் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 35,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 175 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 52 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.