மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு


எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.