மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் சமூக சேவையை முன்னிறுத்தும் வகையில் வாழைச்சேனையில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் இல்லத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதி கட்டடத்தை 2026 மே 10ஆம் திகதி வெற்றிகரமாக கையளித்தது.
சுமார் ரூ. 70 இலட்சம் மதிப்பிலான இத்திட்டத்திற்கு திரு. எஸ். சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர்.
இத்திட்டம் கழகத் தலைவர் லயன் எஸ். மனோகரன் MJF/MAF அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 D10 ஆளுநர் லயன் கே. லோகேந்திரன் PMJF/PMAF அவர்கள் கலந்து கொண்டதுடன், முதல் பெண்மணி லயன் லோஜிதா லோகேந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் கௌரவ அதிதிகளாக லெப்டினன்ட் கேர்னல் ரோஹண விமலசேன மற்றும் மேஜர் சேமசிங்கே அழகக்கோன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக விவேகானந்தா மகளிர் இல்லத் தலைவர் திரு. எஸ். சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.
அத்துடன்,
லயன் பி.ஜி. டேவிட் MAF (செயலாளர்),
லயன் எம். விதுசாகன் MJF/MAF (பொருளாளர்),
லயன் பி. சடாட்சரராஜா MJF/PMAF (திட்டத் தலைவர், மாவட்ட ஆளுநர் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை அமைச்சரவை பொருளாளர்),
லயன் என். தர்ஷன் PMAF (GMST ஒருங்கிணைப்பாளர்),
லயன் ஜி. முரளிதரன் MAF (GMCT ஒருங்கிணைப்பாளர்),
லயன் டி. சுபாஷ்கரன் MAF (வலய தலைவர்),
இரண்டாம் துணை ஆளுநர் டாக்டர் டி. ஆதித்தன் PMJF/PMAF ஆகியோரும்,
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் வாழைச்சேனை மற்றும் ஆரையம்பதி லயன்ஸ் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்தத் திட்டம், குறிப்பாக ஆதரவின்றி வாழும் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் நலன் மற்றும் நலவாழ்வை மேம்படுத்தும் நோக்கில், மனிதநேய சேவைகளிலும் சமூக முன்னேற்றத்திலும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் தொடர்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய பங்களித்த அனைத்து அனுசரணையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கழகம் தனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.













.jpg)







