
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய சந்தேக நபர் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீர பிணைகளில் விடுவித்த நீதிமன்றம் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்துள்ளது.


