சம்மாந்துறையில் மாடுகளை மேய்க்க சென்ற 57 வயதுடைய நபர் உயிரிழப்பு !

(நூருல் ஹுதா உமர்)


சம்மாந்துறை, பழைய வளத்தாப்பட்டி கிராமம் – 01 பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் வாசு என்பவர் மாடுகளை மேய்க்க சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மரண விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் கௌரவ A. M. நஷீல் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.