கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது



சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
டயகம பகுதியில் இருந்து கம்பளை பகுதியை நோக்கி வேன் ஒன்றில் கொண்டு சென்ற போதே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இதன்போது 600 கிலோகிராம் அளவிலான கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கழிவுத் தேயிலையை நிறம் சேர்த்து, புதிய தேயிலை போல் நீண்ட காலமாக விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.