களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 48வது வருடாந்த விளையாட்டு விழா


(ரவி, ராஜா ) களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 48வது வருடாந்த விளையாட்டு விழா  மிகவும் கோலாகலமாக நேற்று சனிக்கிழமை (19) களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது.

களுவாஞ்சிகுடியில் முதற்தர கழகங்களில் ஒன்றான நியூ ஒலிம்பிக் கழகம் தனது 48 ஆண்டில் இவ்வருடம்  கால் தடம்பதிக்கிறது


களுவாஞ்சிகுடியிலே முதன்மையும் பழைமையும் வாய்ந்த விளையாட்டுக் கழகமாக விளங்கும் நியூ ஒலிம்பிக்விளையாட்டுக் கழகம் அன்று 16.04.1967 ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 47 வருடங்கள் கடந்துள்ளna.

இவ்விளையாட்டுக் கழகம் நடாத்திய சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதன்போது தலையணைச்சமர் ,சாக்கோட்டம், சறுக்குமரம் ஏறுதல், முட்டி உடைத்தல் , மரதம் ஓட்டம் , சைக்கிள்ஓட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா , மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களானகோ.கருணாகரம் (ஜனா), ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை), மா.நடராசா (நடா), இரா.துரைரெத்தினம் , ஆகியோர்உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கலந்துகொண்டனர் .