கல்முனையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கல்முனை 2ம் பிரிவு அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் ஆறுமுகன் வேணு  (வயது 29) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.